இந்த பூக்கள் மற்றும் செடிக்கு நான் உபயோக படுத்திய பொருட்கள் இரண்டுமே நாம் பயன்படுத்திய பின் தூக்கி போடும் குப்பை பொருட்கள்தான். உணவு பார்சல் மூடி வரும் அலுமினிய படலம் கொண்டு நாம் பல உபயோகமான கைவினைகளை செய்யலாம் (எடுத்துக்காட்டாக நான் செய்துள்ள அலுமினிய படல விளக்கலங்காரம்: பார்க்க). இந்த பகுதியில் நான் ரோஜா பூக்கள் செய்துள்ளேன்.
திராட்சை கொத்தின் காம்பே பார்க்க ரசனையாகத்தான் இருக்கும், அதன் நுனிகளில் கொஞ்சம் நெயில் பாலிஷ் கலர் செய்து அடி காம்பிற்க்கும் பச்சை வண்ணம் கொடுத்தால் சூப்பராக ஏதோ புள் செடி போல இருக்கும்.
இரண்டையும் சேர்த்து நான் மலர் குவளையாக வைத்தேன். பார்க்க மிக அழகாக வந்திருக்கிறது.
உங்களுக்கும் இது பிடிக்கும் என நினைக்கிறேன்...
இதன் செய்முறை:
ரோஜா பூக்கள் செய்வதற்கு பாயிலில் (foil ) படத்தில் உள்ளது போல சிறியது, நடு மற்றும் பெரியதுமாக இதழ்கள் வெட்டிக்கொள்ளுங்கள்.
நடு மொட்டு செய்வதற்கு, பாயிலை சிறிய சதுரமாக வெட்டி அதை மூன்றாக மடித்தால் நீளதுண்டு பேப்பர் போல இருக்கும்.
அதை ஒரு முனையை பிடித்து அப்படியே உருட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உருட்டிய பகுதியைச் சுற்றி வெட்டி வைத்துள்ள இதழ்களை சிறியதிலிருந்து பெரியதகாக பசை துப்பாக்கி (glue gun) கொண்டு ஒட்டவும். glue gun நம்மூரில் எல்லா கடைகளிலும் கிடைக்குமா என்று தெரியவில்லை, ஆனால் இதைக் கொண்டு ஓட்டினால்தான் பாயில் இதழ்கள் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
ஒரு பூவிற்கு 9-12 இதழ்கள் தேவைப்படும். இதழ்கள் ஒட்டிய பிறகு அதன் முனைகளை லேசாக மடித்து விடவும். அப்போதுதான் பார்க்க ரோஜா போல இருக்கும்.
ஒரு பூ குவளை செய்ய 4-6 ரோஜாக்கள் தேவைப்படும்.
பூக்களின் இதழ் நுனிகளில் பிடித்தமான ரோஜா வண்ண நெயில் பாலிஷ் கொடுத்தால் பார்க்க சூப்பராக இருக்கும்.
தன்டிற்கு ஒரு பேப்பரை உருட்டி தண்டு போல செய்து, பூவின் அடியில் ஒட்டி, பச்சை வண்ணம் கொடுக்கவும் அல்லது பச்சை டேப் சுற்றவும்.
திராட்சை கொத்தின் காம்புச் செடிசெய்வதற்கு 3-4 காம்பு கொத்து எடுத்துக்கொண்டு, திராட்சை பறித்த நுனிகள் மற்றும் அடிதண்டிற்கு நெயில் பாலிஷ் வண்ணங்கள் தீட்டவும்.
பாயில் பேப்பரை சிறியதாக கிழித்து உருட்டி ஆங்காங்கே ஓட்டினால், ரோஜாவிற்கு match- ஆக இருக்கும்.
பூக்களையும் திராட்சை கொத்துச் செடிகளையும் ஒன்றாக சேர்த்து கட்டி ஒரு கண்ணாடி candle-லில் செருகி வைக்கலாம், அல்லது ஒரு குவளையில் clay கொஞ்சம் இட்டு அதில் செருகி வைக்கலாம்.
அவ்வளவுதான் வேலை... நான் சொல்வதற்குதான் பெரிதாக தோன்றும், அனால் இது செய்வதற்கு மிக எளிதான ஒன்றுதான். டிவி ஸ்டான்ட் அல்லது டைனிங் டேபிள் மேல் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் ஒவ்வொரு கைவினைகளையும் பார்த்து ரசித்து பாராட்டுகின்றனர்...
அந்த பாராட்டுக்கள் உங்களுக்கும் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள comment box-இல் குறிப்பிடுங்கள். நன்றி!!!
உங்களுக்கும் இது பிடிக்கும் என நினைக்கிறேன்...
இதன் செய்முறை:
ரோஜா பூக்கள் செய்வதற்கு பாயிலில் (foil ) படத்தில் உள்ளது போல சிறியது, நடு மற்றும் பெரியதுமாக இதழ்கள் வெட்டிக்கொள்ளுங்கள்.
நடு மொட்டு செய்வதற்கு, பாயிலை சிறிய சதுரமாக வெட்டி அதை மூன்றாக மடித்தால் நீளதுண்டு பேப்பர் போல இருக்கும்.
அதை ஒரு முனையை பிடித்து அப்படியே உருட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உருட்டிய பகுதியைச் சுற்றி வெட்டி வைத்துள்ள இதழ்களை சிறியதிலிருந்து பெரியதகாக பசை துப்பாக்கி (glue gun) கொண்டு ஒட்டவும். glue gun நம்மூரில் எல்லா கடைகளிலும் கிடைக்குமா என்று தெரியவில்லை, ஆனால் இதைக் கொண்டு ஓட்டினால்தான் பாயில் இதழ்கள் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
ஒரு பூவிற்கு 9-12 இதழ்கள் தேவைப்படும். இதழ்கள் ஒட்டிய பிறகு அதன் முனைகளை லேசாக மடித்து விடவும். அப்போதுதான் பார்க்க ரோஜா போல இருக்கும்.
ஒரு பூ குவளை செய்ய 4-6 ரோஜாக்கள் தேவைப்படும்.
பூக்களின் இதழ் நுனிகளில் பிடித்தமான ரோஜா வண்ண நெயில் பாலிஷ் கொடுத்தால் பார்க்க சூப்பராக இருக்கும்.
தன்டிற்கு ஒரு பேப்பரை உருட்டி தண்டு போல செய்து, பூவின் அடியில் ஒட்டி, பச்சை வண்ணம் கொடுக்கவும் அல்லது பச்சை டேப் சுற்றவும்.
திராட்சை கொத்தின் காம்புச் செடிசெய்வதற்கு 3-4 காம்பு கொத்து எடுத்துக்கொண்டு, திராட்சை பறித்த நுனிகள் மற்றும் அடிதண்டிற்கு நெயில் பாலிஷ் வண்ணங்கள் தீட்டவும்.
பாயில் பேப்பரை சிறியதாக கிழித்து உருட்டி ஆங்காங்கே ஓட்டினால், ரோஜாவிற்கு match- ஆக இருக்கும்.
பூக்களையும் திராட்சை கொத்துச் செடிகளையும் ஒன்றாக சேர்த்து கட்டி ஒரு கண்ணாடி candle-லில் செருகி வைக்கலாம், அல்லது ஒரு குவளையில் clay கொஞ்சம் இட்டு அதில் செருகி வைக்கலாம்.
அவ்வளவுதான் வேலை... நான் சொல்வதற்குதான் பெரிதாக தோன்றும், அனால் இது செய்வதற்கு மிக எளிதான ஒன்றுதான். டிவி ஸ்டான்ட் அல்லது டைனிங் டேபிள் மேல் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் ஒவ்வொரு கைவினைகளையும் பார்த்து ரசித்து பாராட்டுகின்றனர்...
அந்த பாராட்டுக்கள் உங்களுக்கும் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள comment box-இல் குறிப்பிடுங்கள். நன்றி!!!
No comments:
Post a Comment