Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Monday, November 3, 2014

வீணான பிளாஸ்டிக் கேன்களை கொண்டு செய்த டெய்சி (DAISY) மலர்க்குவளை

நான் இதுவரை முயற்சித்துள்ள பலவகையான கைவினைகளில் மிக சுலபமாக செய்த பிளாஸ்டிக் பூக்கள் இதுதான். பார்க்க ஏதோ நிஜ பூக்கள் போல அவ்வளவு சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்

வெள்ளை பிளாஸ்டிக் கேன்கள் (eg., milk can)
வெள்ளை மற்றும் பச்சை நிற பெயிண்ட்ஸ் (acrylic paints)
பசைத் துப்பாக்கி or இன்ஸ்டன்ட் க்லு (instant glue)
மஞ்சள் வண்ண பேப்பர் (eg: yellow crepe paper)
மெல்லிய குச்சி (ஈர்க்குச்சி, தென்னைமார்க் குச்சி)

செய்முறை:

முதலில் பால் கேனில் சிறிய வளையல் வைத்து ரவுண்டு போட்டு அதனை கத்தரித்து கொள்ளவும்.
அதில் நெருக்கி வருவது போல கூர்மையான இதழ்கள் வரைந்து, தெவையற்ற பகுதிகளை பொறுமையாக வெட்டி எடுக்க வேண்டும்.




பிறகு நடுவில் சிறிய துளை இட்டு, குச்சியை அரை அடியாக ஒடித்து, நடுவில் செருகவும். வெளியே நீட்டிக் கொண்டு தெரியாத அளவிற்கு தளவில் பூவை இருக்க வைத்து பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டிவிட்டால் பூ குச்சியோடு நன்றாக பிடித்துக் கொள்ளும்.
மகரந்தம் செய்வதற்கு, மஞ்சள் பேப்பரை மெல்லியதாக மடித்து, ஒரு பக்கம் மட்டும் "சீப்பு" போல கத்தரிக்கவும். அதை அப்படியே சுற்றி, முனையை ஒட்டிவிடவும். சுற்றி வைத்துள்ள பேப்பரை பூவின் நடுவில் ஒட்டவும்.



DAISY மலர்கள் வெள்ளை வெளேர் என்று இருந்தது (Google images), அதனால் அதற்கு பளிச் வெள்ளை கலர் கொடுத்தேன். வேறு நிறம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
10-12 பூக்கள் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலை அலங்கரித்து, அதில் கொஞ்சம் clay அல்லது பிசைந்த மாவு நிரப்பி பூக்களை செருகி வைத்தால் போதும், வேண்டுமானால் இலைகள் வெட்டி ஆங்காங்கே காம்போடு ஒட்டிவிட்டால் சூப்பராக இருக்கும்.



நீங்களும் இந்த கைவினையை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...