நேற்று வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். காலாவதியான டூத் பேஸ்ட் ஒன்று பாதி உபயோகப் படுத்தபடாமல் இருந்தது. அதை வைத்து என்னப் பண்ணலாம் என்று யோசித்தபோது கிடைத்த ஐடியா தான் இது.
இதற்கு பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை, உங்களுக்கு கோலம் போடத் தெரிந்தால் கூடப் போதும். உங்கள் வீட்டுச் சுவர்களை, உங்கள் கைவண்ணத்தால் மிக அழகானதாக மாற்றிவிடலாம்.
டூத் பேஸ்ட்டில், காபிப் பொடி கலந்து அதில் கொஞ்சமாக வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக கலக்கினால், பெயிண்ட்டின் தடிப்பில் பிரவுன் நிறக் கலவை கிடைக்கும்.
ஒரு கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய அளவில், வடிவத்தில் வெட்டி, அதில் ஒரு பக்கம் முழுவதுமாக இந்தக் கலவையினை விரல்களில் தொட்டுப் பூசுங்கள்.
நன்றாகப் பூச வேண்டும், அட்டை தெரியக்கூடாது.
இப்போது, உங்களுக்குத் தெரிந்த கோலங்கள், மெஹந்தி டிசைன்ஸ், பூக்கள் என்று வித விதமாக விரலினால் வரைந்து, அப்படியே காய விடுங்கள்.
ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்தால் போதும், படம் நன்றாகக் காய்ந்து, வரைந்த ஓவியம் பார்க்க மனதினைக் கொள்ளைக் கொள்ளும்.
வெளிர் நிற சுவற்றில், இந்த அடர்ந்த நிற ஒவியங்கள், மிக அழகாக, பளிச்சென்று தெரியும்.
நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள். நன்றி !
இதற்கு பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை, உங்களுக்கு கோலம் போடத் தெரிந்தால் கூடப் போதும். உங்கள் வீட்டுச் சுவர்களை, உங்கள் கைவண்ணத்தால் மிக அழகானதாக மாற்றிவிடலாம்.
டூத் பேஸ்ட்டில், காபிப் பொடி கலந்து அதில் கொஞ்சமாக வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக கலக்கினால், பெயிண்ட்டின் தடிப்பில் பிரவுன் நிறக் கலவை கிடைக்கும்.
ஒரு கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய அளவில், வடிவத்தில் வெட்டி, அதில் ஒரு பக்கம் முழுவதுமாக இந்தக் கலவையினை விரல்களில் தொட்டுப் பூசுங்கள்.
நன்றாகப் பூச வேண்டும், அட்டை தெரியக்கூடாது.
இப்போது, உங்களுக்குத் தெரிந்த கோலங்கள், மெஹந்தி டிசைன்ஸ், பூக்கள் என்று வித விதமாக விரலினால் வரைந்து, அப்படியே காய விடுங்கள்.
ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்தால் போதும், படம் நன்றாகக் காய்ந்து, வரைந்த ஓவியம் பார்க்க மனதினைக் கொள்ளைக் கொள்ளும்.
வெளிர் நிற சுவற்றில், இந்த அடர்ந்த நிற ஒவியங்கள், மிக அழகாக, பளிச்சென்று தெரியும்.
நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள். நன்றி !