எங்கள் கிராமத்து வீட்டுத் தோட்டத்தில் நிறைய கலர்களில் ஜின்னியா மலர்ச் செடிகள் வைத்திருந்தோம். இப்போது நினைத்தாலும் அந்தப் பூக்களின் அழகு மனதை நிறைத்துவிடும். அப்பூக்களை மனதிற்க்கொண்டு இந்த பிளாஸ்டிக் பூக்களை செய்துள்ளேன். நன்றாக வந்திருக்கிறதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்! :-) இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க இங்கே சொடுக்கவும்.
கத்தரிக்கோல்
பெயிண்ட்ஸ்
கடுகு
பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டக் கூடிய பசை அல்லது பசைத் துப்பாக்கி
குச்சிகள் அல்லது நியூஸ் பேப்பர்ஸ்
ஒரு பூ செய்வதற்கு மூன்று அடுக்கு இதழ்கள் தேவைப் படுகிறது. படத்தில் உள்ளது போல இதழ்கள் வரைந்து கொள்ளுங்கள்.
இதழ்களை தனித்தனியாக பிரித்து வெட்டி விடுங்கள்.
மூன்று அடுக்குகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டுங்கள்.
நடுவிற்கு பசை தடவி கடுகினை தூவவும். நன்றாக அழுத்திவிடவும்.
காம்பு செய்வதற்கு நியூஸ் பேப்பரை மடித்து சதுரமாக கிழித்துக் கொள்ளுங்கள்.
சதுரமான பேப்பரின் ஒரு முனையை பிடித்துக் கொண்டு, அழுத்தி உருட்டினால், உருண்டையான குச்சி போல வரும். எதிர் முனை வரும் வரை உருட்டி, முனையை பசைக் கொண்டு ஒட்டிவிடவும்.
இப்போது கம்பி போல இருக்கும் பேப்பர் குச்சிகளின் இரு ஓரங்களையும் வெட்டிவிட்டால் நடுப் பகுதி நல்ல உறுதியான குச்சி போல இருக்கும்.
இதன் ஒரு முனையில் பசை தடவி பூவின் அடியில் ஒட்டுங்கள்.
படத்தில் இருப்பது போல இலைகள் வெட்டி காம்பில் இடைவெளி விட்டு ஒட்டுங்கள்.
பூவிற்கு தகுந்த வண்ணம் கொடுங்கள். நடுவில் உள்ள மகரந்தப் பகுதிக்கு, கடுகின் மேல் லேசாக மஞ்சள் வண்ணம் இடுங்கள்.
இலைகளுக்கும் காம்பிர்க்கும் பச்சை வண்ணம் கொடுங்கள்.
இது போல நிறைய வண்ணங்களில் பூக்கள் செய்து ஒன்றாக ஒரு பூ ஜாடியில் செருகி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கைவினைப் பூக்கள் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பாக்ஸில் குறிப்பிடவும். நன்றி !!!
தேவையான பொருட்கள்:
வெள்ளை நிற பிளாஸ்டிக் கேன்கள்கத்தரிக்கோல்
பெயிண்ட்ஸ்
கடுகு
பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டக் கூடிய பசை அல்லது பசைத் துப்பாக்கி
குச்சிகள் அல்லது நியூஸ் பேப்பர்ஸ்
செய்முறை:
படத்தில் காட்டபட்டுள்ளது போல மூன்று விட்டங்களில் பிளாஸ்டிக் கேனில் ரவுண்டு வரைந்து, வெட்டி எடுத்துத் தனித்தனியாக வைக்கவும்.ஒரு பூ செய்வதற்கு மூன்று அடுக்கு இதழ்கள் தேவைப் படுகிறது. படத்தில் உள்ளது போல இதழ்கள் வரைந்து கொள்ளுங்கள்.
இதழ்களை தனித்தனியாக பிரித்து வெட்டி விடுங்கள்.
மூன்று அடுக்குகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டுங்கள்.
நடுவிற்கு பசை தடவி கடுகினை தூவவும். நன்றாக அழுத்திவிடவும்.
காம்பு செய்வதற்கு நியூஸ் பேப்பரை மடித்து சதுரமாக கிழித்துக் கொள்ளுங்கள்.
சதுரமான பேப்பரின் ஒரு முனையை பிடித்துக் கொண்டு, அழுத்தி உருட்டினால், உருண்டையான குச்சி போல வரும். எதிர் முனை வரும் வரை உருட்டி, முனையை பசைக் கொண்டு ஒட்டிவிடவும்.
இப்போது கம்பி போல இருக்கும் பேப்பர் குச்சிகளின் இரு ஓரங்களையும் வெட்டிவிட்டால் நடுப் பகுதி நல்ல உறுதியான குச்சி போல இருக்கும்.
இதன் ஒரு முனையில் பசை தடவி பூவின் அடியில் ஒட்டுங்கள்.
படத்தில் இருப்பது போல இலைகள் வெட்டி காம்பில் இடைவெளி விட்டு ஒட்டுங்கள்.
பூவிற்கு தகுந்த வண்ணம் கொடுங்கள். நடுவில் உள்ள மகரந்தப் பகுதிக்கு, கடுகின் மேல் லேசாக மஞ்சள் வண்ணம் இடுங்கள்.
இலைகளுக்கும் காம்பிர்க்கும் பச்சை வண்ணம் கொடுங்கள்.
இது போல நிறைய வண்ணங்களில் பூக்கள் செய்து ஒன்றாக ஒரு பூ ஜாடியில் செருகி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கைவினைப் பூக்கள் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பாக்ஸில் குறிப்பிடவும். நன்றி !!!