Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Monday, November 10, 2014

பிளாஸ்டிக் கேன் கொண்டு செய்த ஜின்னியா பூக்கள்

எங்கள் கிராமத்து வீட்டுத் தோட்டத்தில் நிறைய கலர்களில் ஜின்னியா மலர்ச் செடிகள் வைத்திருந்தோம். இப்போது நினைத்தாலும் அந்தப் பூக்களின் அழகு மனதை நிறைத்துவிடும். அப்பூக்களை மனதிற்க்கொண்டு இந்த பிளாஸ்டிக் பூக்களை செய்துள்ளேன். நன்றாக வந்திருக்கிறதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்! :-) இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க இங்கே சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை நிற பிளாஸ்டிக் கேன்கள்
கத்தரிக்கோல்
பெயிண்ட்ஸ்
கடுகு
பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டக் கூடிய பசை அல்லது பசைத் துப்பாக்கி
குச்சிகள் அல்லது நியூஸ் பேப்பர்ஸ்

செய்முறை:

படத்தில் காட்டபட்டுள்ளது போல மூன்று விட்டங்களில் பிளாஸ்டிக் கேனில் ரவுண்டு வரைந்து, வெட்டி எடுத்துத் தனித்தனியாக வைக்கவும்.
ஒரு பூ செய்வதற்கு மூன்று அடுக்கு இதழ்கள் தேவைப் படுகிறது. படத்தில் உள்ளது போல இதழ்கள் வரைந்து கொள்ளுங்கள்.
இதழ்களை தனித்தனியாக பிரித்து வெட்டி விடுங்கள்.
மூன்று அடுக்குகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டுங்கள்.

நடுவிற்கு பசை தடவி கடுகினை தூவவும். நன்றாக அழுத்திவிடவும்.
காம்பு செய்வதற்கு நியூஸ் பேப்பரை மடித்து சதுரமாக கிழித்துக் கொள்ளுங்கள். 
சதுரமான பேப்பரின் ஒரு முனையை பிடித்துக் கொண்டு, அழுத்தி உருட்டினால், உருண்டையான குச்சி போல வரும். எதிர் முனை வரும் வரை உருட்டி, முனையை பசைக் கொண்டு ஒட்டிவிடவும். 
இப்போது கம்பி போல இருக்கும் பேப்பர் குச்சிகளின் இரு ஓரங்களையும் வெட்டிவிட்டால் நடுப் பகுதி நல்ல உறுதியான குச்சி போல இருக்கும். 
இதன் ஒரு முனையில் பசை தடவி பூவின் அடியில் ஒட்டுங்கள்.
படத்தில் இருப்பது போல இலைகள் வெட்டி காம்பில் இடைவெளி விட்டு ஒட்டுங்கள்.

பூவிற்கு தகுந்த வண்ணம் கொடுங்கள். நடுவில் உள்ள மகரந்தப் பகுதிக்கு, கடுகின் மேல் லேசாக மஞ்சள் வண்ணம் இடுங்கள்.
இலைகளுக்கும் காம்பிர்க்கும் பச்சை வண்ணம் கொடுங்கள்.
இது போல நிறைய வண்ணங்களில் பூக்கள் செய்து ஒன்றாக ஒரு பூ ஜாடியில் செருகி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கைவினைப் பூக்கள் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். 
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பாக்ஸில் குறிப்பிடவும். நன்றி !!!

தேங்காய் மூடி மற்றும் பழைய நியூஸ் பேப்பர் கொண்டு செய்த பூ ஜாடி

எனக்கு எப்போதுமே தேங்காயை துருவிவிட்டு அதன் மூடியை அப்படியே குப்பையில் தூக்கி போட மனம் வராது.இதுவே நான் எங்கள் கிராமத்தில் இருந்திருந்தால், அடுப்பிற்கு, தண்ணி காய போட, என்று உபயோகபடுத்துவோம். இப்போது அதைக் கொண்டு எதாவது கைவினை செய்யலாம் என்ற யோசித்து பூ குடை, விளக்கு, போன்ற சில கைவினைகளை செய்திருக்கிறேன். தேங்காய் மூடியை வித விதமாக பூ ஜாடி போல அலங்காரம் செய்து பூங்கொத்துகளை செருகி வைக்கலாம். நான் செய்து பார்த்த தேங்காய் மூடி பூ ஜாடி இந்த ப்ளாக் போஸ்டில்... (இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).

தேவையான பொருட்கள்

தேங்காய் மூடி
நியூஸ் பேப்பர்கள்
பெயிண்ட்ஸ் (acrylic paints)
பசைத் துப்பாக்கி (glue gun/instant glue)
BRU பாட்டில் மூடி
அலங்கரிக்க: மணிகள், கற்கள்

செய்முறை:

தேங்காய் மூடி கொஞ்சம் பெரிய மூடியாக எடுத்துக்கொள்ளுங்கள். பிசிறில்லாமல் உடைந்திருந்தால் நன்றாக இருக்கும். மூடியின் மேல் இருக்கும் நார்களை கத்தி கொண்டு சுரண்டி எடுத்துவிடவும், இல்லை என்றால் பசை சரியாக ஒட்டாது.
பாட்டில் மூடியை தேங்காய் மூடியின் அடியில் பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டுங்கள் (இது பாட்டில் மூடி தேங்காய் மூடியோடு நன்றாக ஒட்டிக்கொள்ள உதவும்.).
பேப்பர் மணிகள் செய்வதற்கு, நியூஸ் பேப்பரை மடித்து சதுரம் சதுரமாக கிழித்துக் கொள்ளுங்கள். அளவு என்பது அவரவர் விருப்பம் போல வேறுபடலாம்.
சதுரமான பேப்பரை ஒரு முனையை பிடித்துக் கொண்டு, அழுத்தி உருட்டினால், உருண்டையான குச்சி போல வரும். எதிர் முனை வரும் வரை உருட்டி, முனையை பசைக் கொண்டு ஒட்டிவிடவும்.


இப்போது கம்பி போல இருக்கும் பேப்பர் குச்சிகளை மணிகளாக உருட்ட, ஒரு பேப்பர் குச்சியினை எடுத்து அதன் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைப் பக்கம் சுற்றவும். இப்போது உருண்டை மணி போல வந்திருக்கும். முனையை ஒட்டி நன்றாக அழுத்திவிடவும்.
தேங்காய் மூடி வெளிப்பகுதி முழுவதற்கும் ஓட்டுவதற்கு, நிறைய மணிகள் தேவைப்படும்.
மணிகளை ஒன்றொன்றாக கீழிருந்து மேல் அல்லது மேலிருந்து கீழாக நெருக்கமாக ஒட்டவும்.
முழுவதுமாக ஒட்டிய பிறகு, வித விதமாக பெயிண்ட் செய்யலாம். நிறைய கலர்ஸ் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
தேங்காய் மூடி உள்ளே கருப்பு வண்ணம் கொடுக்கவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் உங்களுக்கு பிடித்த மாதிரி, உங்கள் கற்பனை போல மணிகள் கற்கள் கொண்டு அலங்கரியுங்கள்.
உள்ளே கொஞ்சம் clay நிரப்பி வித விதமான பூக்கள் செருகுங்கள்... இந்த பாட்டிலில் செய்த தாமரை மலர்களின் செய்முறை இங்கே.
 இந்த ஆரஞ்சு மற்றும் சிகப்பு பூக்களின் செய்முறை வீடியோக்களை லிங்க் செய்திருக்கிறேன்.

மிக அழகான இந்த பூ ஜாடியை உங்கள் கற்பனைக்கேற்ப செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி! 

Monday, November 3, 2014

வீணான பிளாஸ்டிக் கேன்களை கொண்டு செய்த டெய்சி (DAISY) மலர்க்குவளை

நான் இதுவரை முயற்சித்துள்ள பலவகையான கைவினைகளில் மிக சுலபமாக செய்த பிளாஸ்டிக் பூக்கள் இதுதான். பார்க்க ஏதோ நிஜ பூக்கள் போல அவ்வளவு சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்

வெள்ளை பிளாஸ்டிக் கேன்கள் (eg., milk can)
வெள்ளை மற்றும் பச்சை நிற பெயிண்ட்ஸ் (acrylic paints)
பசைத் துப்பாக்கி or இன்ஸ்டன்ட் க்லு (instant glue)
மஞ்சள் வண்ண பேப்பர் (eg: yellow crepe paper)
மெல்லிய குச்சி (ஈர்க்குச்சி, தென்னைமார்க் குச்சி)

செய்முறை:

முதலில் பால் கேனில் சிறிய வளையல் வைத்து ரவுண்டு போட்டு அதனை கத்தரித்து கொள்ளவும்.
அதில் நெருக்கி வருவது போல கூர்மையான இதழ்கள் வரைந்து, தெவையற்ற பகுதிகளை பொறுமையாக வெட்டி எடுக்க வேண்டும்.




பிறகு நடுவில் சிறிய துளை இட்டு, குச்சியை அரை அடியாக ஒடித்து, நடுவில் செருகவும். வெளியே நீட்டிக் கொண்டு தெரியாத அளவிற்கு தளவில் பூவை இருக்க வைத்து பசைத் துப்பாக்கி கொண்டு ஒட்டிவிட்டால் பூ குச்சியோடு நன்றாக பிடித்துக் கொள்ளும்.
மகரந்தம் செய்வதற்கு, மஞ்சள் பேப்பரை மெல்லியதாக மடித்து, ஒரு பக்கம் மட்டும் "சீப்பு" போல கத்தரிக்கவும். அதை அப்படியே சுற்றி, முனையை ஒட்டிவிடவும். சுற்றி வைத்துள்ள பேப்பரை பூவின் நடுவில் ஒட்டவும்.



DAISY மலர்கள் வெள்ளை வெளேர் என்று இருந்தது (Google images), அதனால் அதற்கு பளிச் வெள்ளை கலர் கொடுத்தேன். வேறு நிறம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
10-12 பூக்கள் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலை அலங்கரித்து, அதில் கொஞ்சம் clay அல்லது பிசைந்த மாவு நிரப்பி பூக்களை செருகி வைத்தால் போதும், வேண்டுமானால் இலைகள் வெட்டி ஆங்காங்கே காம்போடு ஒட்டிவிட்டால் சூப்பராக இருக்கும்.



நீங்களும் இந்த கைவினையை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...