Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Monday, March 24, 2014

தேங்காய் மூடி மற்றும் கற்களைக் கொண்டு செய்த மெழுகுவர்த்தி அலங்காரம்

இந்த விளக்கலங்காரத்தை மிக சுலபமாக செய்யலாம். இதில் candle-க்கு பதிலாக விளக்கையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

விளக்கு அல்லது சிறிய அலங்கார மெழுகுவர்த்தி
தேங்காய் மூடி
அலங்கார கற்கள்
க்ளிட்டேர்ஸ்
மணல்
மணிகளாலான செயின்
பசை துப்பாக்கி
சிறிய கார்ட்போர்ட் அட்டை

செய்முறை:

தேங்காய் மூடி வெளி அலங்காரம்:
முதலில் தேங்காய் மூடியின் மேல் இருக்கும் நார்களை எடுத்துவிடவும்.
மூடியின் உடைந்த மேற்பகுதியில் படத்தில் உள்ளது போல மணிகளாலான
செயினை ஒட்டவும்.
பிறகு மூடியின் வெளிபகுதியில் சுற்றி மணிகள் ஒட்டி தொங்க விடவும்.
தேங்காய் மூடி உட்பகுதி அலங்காரம்:
தேங்காய் மூடியின் உள் ஓட்டின் மேல் ரெசின் கற்கள் ஒட்டவும்.
ரெசின் கற்கள் இல்லையென்றால் சின்னச்சின்ன கற்களை எடுத்து நெயில் பாலிஷ் அடித்து அதை ஓட்டின் மேல் ஒட்டவும்.
மூடியை ஒரு கப்பின் மேல் வைத்து அதன் பாதி அளவிற்கு மணல் நிரப்பவும்.
மணலின் மேல் உடைத்த ரெசின் கற்களை நிரப்புங்கள். இந்தக் கற்கள் கிடைக்கவில்லை என்றால் டீ தூள் (துகள்கள் பெரிது பெரிதாக இருப்பது) தூவவும்.
அதை மேல் க்ளிட்டேர்ஸ் தூவுங்கள். நிறைய கலர்களை கலக்கி தூவினால் பார்க்க அழகாக இருக்கும்.
அதன் நடுவில் விளக்கு அல்லது சிறிய உருண்டையான மெழுகுவர்த்தியை வைத்து, அதனை சுற்றி கலர் கற்களினால் அலங்காரம் செய்தால் சூப்பராக இருக்கும்.
மூடியின் அடிபகுதிக்கு சிறிய வட்டமாக வெட்டிய அட்டையை எடுத்து அதன் மேல் வெள்ளை பேப்பரை ஒட்டுங்கள்.
அதன் மேல் உருண்டை கற்களை பூ வடிவில் ஒட்டுங்கள்.
தேங்காய் மூடியை அதன் மேல் நேராக ஒட்டிவிடவும்.
இந்த விளக்கு அலங்காரத்தை, தீபம் ஏற்றி இருட்டில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
க்ளிட்டேர்ஸின் மினுமினுப்பு தீபத்தின் ஒளியில் கண்களை கொள்ளை கொள்ளும்.
இதில் மணல் மற்றும் கற்கள் இருப்பதால் ஒளியின் சூடு பரவாது.
நீங்களும் இந்த விளக்கு அலங்காரத்தை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள். நன்றி...!

Wednesday, March 19, 2014

அரிசிப் பை (அல்லது துணிப் பை) கொண்டு செய்த மலர் அலங்காரம்!

அரிசிப் பை (அல்லது துணிப் பை) தேவை இல்லாமல் இருந்தால் அதைக் கொண்டு அழகான கைவினைகள் செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மலர் அலங்காரம்...

தேவையான பொருட்கள்:

அரிசிப் பை (அல்லது துணிப் பை)

பார்சல் பாக்ஸ் அட்டை

பசை துப்பாக்கி

அலங்கார கற்கள்


செய்முறை:

அரிசிப் பை ரோஸ்:
முதலில் அரிசிப் பையில் ரோஜாப் பூக்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அரிசிப் பையை குறுக்குவாக்கில் சின்னச்சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வெட்டிய பகுதியினை கையில் பிடித்து ஒரு முனையை படத்தில் உள்ளது போல மடித்துக் கொள்ளவும்.
மடித்த முனையை பிடித்து ஒரு ஒரு இன்ச் நீல அளவிற்கான துணியை சுருட்டிக் கொண்டே வரவும்.
பிறகு, நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டு துணியை ஒரு முறுக்கு முறுக்கி பூவோடு சுற்றவும்.
ஒரு முறுக்கு - ஒரு சுற்று என்பதாக பூவின் முனை வரை சுற்றவும்.
முனையை பசை துப்பாக்கி கொண்டு பசை தடவி பூவின் அடியில் ஒட்டவும்.
பூவின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் அதிகப்படி துணியை வெட்டிவிடவும்.
இதே போல நிறைய பூக்களை செய்து கொள்ளுங்கள்.
முதல் பூ செய்யும்போது கொஞ்சம் சிரமம் போல தெரியும், 2-3 பூக்களை செய்து முடித்த பிறகு, இது மிக மிக எளிதாக தோன்றும். ஒரு நிமிடத்தில் 2 பூக்கள் செய்து விடலாம். துணியை முறுக்கி முறுக்கி சுற்றினால் முடிந்தது.
மலர் அலங்காரம்:
பூக்கள் தேவையான அளவு செய்த முடித்த பிறகு ஒரு பாக்ஸ் அட்டையை எடுத்து அதை "ரிங்" போல வெட்டவும்.
அதில் பூக்களை ஒவ்வொன்றாக பசை துப்பாக்கி கொண்டு ஒட்டவும்.
கொஞ்சம் இரண்டு ஓரங்களிலும் இடம் விட்டு பூக்களை ஒட்டவும்,
அப்போதுதான் ஓரங்களில் கற்களை ஓட்டமுடியும்.
பூக்களை முழுவதுமாக ஒட்டி முடித்தும், இரண்டு ஓரகளிலும் கற்கள் ஒட்டவும்.
நான் பச்சை மற்றும் சிகப்பு நிற ரெசின் கற்களை ஒட்டி உள்ளேன்.
உங்களுக்கு இந்த கற்கள் கிடைக்கவில்லை என்றால் பெரிய சைஸ் மணிகள் அல்லது சிறு கற்கள் அல்லது கூலங்கற்களில் நெயில் பாலிஸ் அடித்து ஓட்டலாம்.
பசை காய்ந்து கற்கள் நன்றாக ஒட்டிய பிறகு, சுவற்றில் ஆணி கொண்டு மாட்டிவிடலாம்.
இந்த கைவினை செய்வதற்கு சுலபம், பார்க்கவும் அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!




Tuesday, March 11, 2014

டிஷு ஹோல்டர் மற்றும் முட்டை அட்டை கொண்டு செய்த மலர்த் தொங்கி

தேவையான பொருட்கள்:

டிஷு ஹோல்டர் 
முட்டை அட்டை
பேப்பர் தட்டு பெரியது 1
பேப்பர் கப் சிறியது 1
கத்தரிக்கோல் 
பசை துப்பாக்கி/பசை 
க்ளிட்டேர்ஸ் 
பெயிண்ட், அலங்கார ஜம்கி 

செய்முறை:

டிஷு பூக்கள் செய்யும் முறை:
முதலில் டிஷு ஹோல்டேரை பூவிதழ்கள் போல (படத்தில் உள்ளது போல்) வெட்டிக் கொள்ளவும். 
பிறகு வெட்டி வைத்துள்ள காகித இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக வட்டவடிவில் பூ போல ஒட்டவும்.
நடுவிற்கு மடல் போல செய்ய வேண்டும். அதற்கு டிஷு ஹோல்டேரை சின்னச்சின்னதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன வட்டப்பகுதியினை எடுத்து, மடங்கின இடத்தில விரல் கொண்டு கீழாக அழுத்தி, அந்த மடிப்பில் பசை தடவி ஒட்டிவிடவும். 
இப்பொழுது பார்க்க பூ மொக்கு போல இருக்கும். அதை பூவின் நடுவில் ஒட்டவும்.
இது போல தேவையான பூக்கள் செய்து, தகுந்த பெயிண்ட் கொடுக்கவும்.
வேண்டுமானால் பூவில் ஜம்கி மற்றும் க்ளிட்டேர்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம்.
முட்டை பூக்கள் செய்யும் முறை:
முட்டை அட்டையை பிரித்து, முட்டை வைக்கும் பக்கத்தை தனியாக வெட்டி எடுக்கவும். அதில் உள்ள ஒவ்வொரு குழியையும் தனித்தனியாக வெட்டவும்.
ஒரு குழியை எடுத்து ஆடை படத்தில் காட்டி உள்ளது போல பூ வடிவில் வெட்டவும். இது மிகவும் சுலபம், ஏனென்றால் ஏறக்குறைய முட்டை அட்டையை ஒவ்வொரு குழிப்பகுதியாக நீங்கள் வெட்டும்போதே உங்களுக்கு பூ வடிவம் கேடைதுவிடும். அதை கொஞ்சம் "trim" செய்தால் போதும்.
வெட்டி வைத்துள்ள முட்டை அட்டை பூக்களை உங்களுக்கு பிடித்த மாதிரி அலங்கரிக்கவும்.
பூவேலை முடிந்ததும் தொங்கி செய்வது எப்படி என்று பாப்போம்.
முதல் அடுக்கு:
முதை அடுக்கு தொங்கி செய்வதற்கு பெரிய தட்டினை பயன்படுத்த போகின்றோம். தட்டின் ஓரம் முழுவதற்கும் வரிசையாக டிஷு ஹோல்டர் பூக்களை வரிசையாக ஒட்டவும்.
தட்டின் உள்ளே நான்கு துளை போட்டு நூல் நுழைத்து வெளியில் முடிச்சிடவும்.
தட்டின் உள்பகுதியில் க்ளிட்டேர்ஸ் ஜம்கி கொண்டு அலங்கரிக்கவும்.
இரண்டாம் அடுக்கு:
இரண்டாம் அடுக்கு செய்வதற்கு சின்ன கப்பினை பயன்படுத்த போகின்றோம்.
கப்பின் ஓரம் சுற்றி முட்டை அட்டைப் பூக்களை ஒட்டவும்.
கப்பின் வெளிபகுதியில் ஜம்கி ஒட்டவும்.
நடுவில் தொங்கவிட:
நடுவில் தொங்க விட டிஷு ஹோல்டேரில் மொக்கு போல செய்தோமில்லையா அதை ஒன்றன் முனையை இன்னொரு மடக்கு பகுதியில் ஒட்டி ஓட்டினால் செயின் போல வரும், செயினின் ஒரு முனையை கப்பின் நடுவில் ஒட்டவும். இன்னொரு முனையில் மூன்று முட்டை பூக்களை ஒட்டிவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்.
கடைசி வேலை:
முதல் அடுக்கையும் இரண்டாம் அடுக்கையும் ஓட்டுவதற்கு டிஷு ஹோல்டர் செயின் அல்லது ஒரு முட்டைப் பூவினை பயன்படுத்தலாம்.
நான் ஒரு முட்டைப் பூவின் அடிப்பகுதியை பெரிய தட்டின் நடுவில் ஒட்டி, பூவின் இதழ் முனைகளில் பசை தடவி இரண்டாம் அடுக்கினை ஒட்டி உள்ளேன்.
கடைசியாக பசை நன்றாக காய்ந்ததும், தொங்கும் பூக்களை ரூமின் நடுவில் சுவற்றில் மடக்கு ஆணி அடித்து அதில் தொங்க விடவும்.
பார்க்க அழகாக இருக்கும் இந்த "craft" செய்வதற்கும் சுலபமே.
நீங்களும் இதனை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...